திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பத்மஶ்ரீ தாமோதரனுக்கு மனித நேயத்தின் மறு உருவம் என பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பத்மஶ்ரீ தாமோதரனுக்கு மனித நேயத்தின் மறு உருவம் என பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்!




மக்களவை தேர்தலில்
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி உறையூரை சேர்ந்த கிராமாலயா நிறுவனர் பத்மஶ்ரீ தாமோதரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு தேர்தல் ஆணையம் கேஸ் ஸ்டவ் சின்னம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் தாமோதரன் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
வேட்பாளர் தாமோதரனுக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அதில் மனித நேயத்தின் மறு உருவம், மானுடம் போற்றும் மறத்தமிழன், சமூக சேவகர், சமூக நீதியின் பாதுகாவலர், சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்ட பொது மக்கள் ஆகிய நாங்கள் கேஸ் ஸ்டவ் சின்னத்தில் வாக்களித்து உங்களை வெற்றி பெற செய்வோம் என பொது மக்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.




