திருச்சி மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி ராட்சத பலூனை பறக்க விட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்!
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 100 சதவிகித வாக்குபதிவை வலியுறுத்தி திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் இன்று தொடங்கி வைத்தார்.





தொடர்ந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பலூனை பறக்க விட்டார். இந்நிகழ்வுகளில் மாநகராட்சி ஆணையர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.




