அன்பின் ஒளியாகத் திகழும் இயேசு கிறிஸ்து பிறந்த இந்நாளைக் கொண்டாடும்-த.வெ.க. தலைவர் விஜய்
அன்பின் ஒளியாகத் திகழும் இயேசு கிறிஸ்து பிறந்த இந்நாளைக் கொண்டாடும்-த.வெ.க. தலைவர் விஜய்

இன்று கிறிஸ்துமல் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள, கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில்,’மனித குலத்தில் அமைதி, கருணை, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஆகியவை தழைத்துச் செழிக்க நற்போதனைகளை வழங்கி, அகிலம் எங்கிலும் அன்பின் ஒளியாகத் திகழும் இயேசு கிறிஸ்து பிறந்த இந்நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் பெருவிழா நல்வாழ்த்துகள்’.இவ்வாறு த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.


Comments are closed.