இராப் பத்து 14 ஆம் நாளில் நம்பெருமாள் இன்று திருவாய்மொழித் திருநாள்.
இராப் பத்து 14 ஆம் நாளில் நம்பெருமாள் இன்று திருவாய்மொழித் திருநாள்.

நம்பெருமாள் இன்று திருவாய்மொழித் திருநாள் (இராப் பத்து) 14 ஆம் நாளில் அஜந்தா சௌரிக் கொண்டை சாற்றி அதில் கலிங்கத்துராய், ஸ்ரீ ரங்க நாச்சியார் பதக்கம்,அழகிய மணவாளன் பதக்கம், கல் இழைத்த ஒட்டியாணம் சிரசில் நெற்றி பட்டையாக அணிந்து , மகர கர்ண பத்ரம் அணிந்து; திருமார்பில் பங்குனி உத்திர பதக்கம், அதன் கீழ் சிகப்பு கல் அடுக்கு பதக்கங்கள், மகரி , நெல்லிக்காய் மாலை,மரகத பச்சை திருப்பாவை கிளி ஹாரம் ,தங்க பூண் பவழ மாலை, 8 வட முத்து மாலை சாற்றி,வைரஅபய ஹஸ்தம், நெல்லிக்காய் மாலை, தங்க பூண் பவழ மாலை, 8 வட முத்து மாலை, வெளிர் பச்சை வர்ண பட்டு உடுத்தி.
பின் சேவையாக – கண்ட பேரண்ட பக்ஷி பதக்கம், புஜ கீர்த்தி,தாயத்து சரங்கள் அணிந்து சேவை சாத்திக்கிறார்.


Comments are closed.