த.வெ.க தலைவர் விஜய் வீரமங்கை வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
த.வெ.க தலைவர் விஜய் வீரமங்கை வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் இந்தியப் பெண் போராளி வேலுநாச்சியார் . தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்படி, தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் சிலைக்கு விஜய் மரியாதை செலுத்தினார். காமராஜர், அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களுக்குப் பிறகு, விடுதலைப் போராட்ட வீராங்கனையான வேலுநாச்சியாருக்கு விஜய் மரியாதை செலுத்தியது, அவர் பெண்ணுரிமை மற்றும் வீர வரலாற்றிற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பதிவில்,
விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி, தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி! சமூக சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த எழுச்சிக் கனல்! எம் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் வழியில், மக்கள் விரோத ஆட்சியாளர்களை விரட்டி, மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்! இவ்வாறு விஜய் கூறினார்.


Comments are closed.