பொள்ளாச்சியில் திரண்ட ஆயிரக்கணக்கானோர், ‘போதை இல்லா தமிழகம்’ உருவாக்க அண்ணாமலை வெளியிட்ட 6 மாத செயல்திட்டம்!
பொள்ளாச்சியில் திரண்ட ஆயிரக்கணக்கானோர், ‘போதை இல்லா தமிழகம்’ உருவாக்க அண்ணாமலை வெளியிட்ட 6 மாத செயல்திட்டம்!

பொள்ளாச்சியில் WTLF (We the Leaders Foundation) சார்பில் நடைபெற்ற ‘போதை இல்லா தமிழகம்’ மாநாட்டில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களில் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய இலக்குகள் மற்றும் திட்டங்கள் குறித்த விரிவான அறிக்கை ஒன்றை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
1. ஜூலை மாதம்: ‘White Band’ மக்கள் இயக்கம்
ஜூலை 2026 முழுவதும் ‘White Band மாதம்’ என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து, போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இந்தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் சமூகப் பொறுப்பு.
இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் “போதை விழிப்புணர்வு மாதம்” ஆகக் கடைப்பிடிக்கப்பட்டு; வீடு, தெரு, கிராமம், மற்றும் கல்வி நிலையங்கள் வரை இந்த விழிப்புணர்வு கொண்டு செல்லப்படும்.
இந்த இயக்கத்தில் இணைந்துள்ளவர்களில் 17% பேர் பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் சான்றாகும்.

2. ஆகஸ்ட் மாதம்: 50 லட்சம் மரக்கன்றுகள்
சமூக மாற்றம் என்பது போதை ஒழிப்போடு முடிவடைவதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆகஸ்ட் மாதத்தை “சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்” ஆகக் கடைப்பிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்ட மக்கள் இயக்கம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
3. அக்டோபர் 15: அப்துல் கலாம் பெயரில் புதிய மையம்
வரும் அக்டோபர் 15, 2026 அன்று, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics” தொடங்கப்பட உள்ளது.
இதன் மூலம் நற்பண்புகள் மற்றும் சமூக மாற்றத்திற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு, அடுத்த ஓராண்டுக்குள் 1.5 லட்சம் தலைவர்களை உருவாக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
”மாற்றம் என்பது யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்குவது அல்ல; ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம் ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு, மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம். மாறுவோம்… மாற்றுவோம்!”
– அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவர்.
பாதுகாப்பான, போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான மற்றும் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்த அறிக்கையின் வாயிலாக அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
#Annamalai #WeTheLeaders #WTLF #DrugFreeTamilNadu #WhiteBandMovement #GreenTamilNadu #APJKalamCentre #PollachiConference #SocialChangeTN





Comments are closed.