புதுக்கோட்டை திருமயம் கிளை நூலகத்தில் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோலாகலம்!
புதுக்கோட்டை திருமயம் கிளை நூலகத்தில் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோலாகலம்!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் செயல்பட்டு வரும் முழுநேரக் கிளை நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான சிறப்புக் வழிகாட்டுதல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு. வேல்முருகன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுரேஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் முறைகள், திட்டமிட்டுப் படிக்கும் நுட்பங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு ஆலோசனைகளையும் ஊக்க உரைகளையும் வழங்கினர்.

மேலும், இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம். சுப்புராம், தொழிலதிபர் SLS S. அக்பர் அலி, மற்றும் வாசகர் வட்டத் தலைவர் K. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.

இப்போட்டித் தேர்வு வழிகாட்டுதல் முகாம் மற்றும் கலந்துரையாடலில் திருமயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வு மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாணவர்கள் தங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக, திருமயம் நூலகத்தின் நூலகர்கள் மு. மாலதி மற்றும் க. மகாலெட்சுமி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த விருந்தினர்களுக்கும் மாணவர்களுக்கும் தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
#Pudukkottai #Thirumayam #PudukkottaiNews #Library #CompetitiveExams #TNPSC #TNPSCPreparation #CareerGuidance #StudentsAwareness #ThirumayamLibrary #TNGovernment #PublicLibrary





Comments are closed.