சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்களில் ரூ.71லட்சம் மற்றும் 1 கிலோ தங்கம் பக்தர்கள் காணிக்கை

0

சமயபுரம் மாரியம்மன் கோவிலில்
உண்டியல்களில் ரூ.71லட்சம் மற்றும் 1 கிலோ தங்கம் பக்தர்கள் காணிக்கை

Bismi

சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், காணிக்கையாக ரூ.71 லட்சத்து 5ஆயிரத்து 563-ம், 1கிலோ 278-கிராம் தங்கமும், 1கிலோ 840-கிராம் வெள்ளியும், அயல்நாட்டு நோட்டு 85-ம் அயல்நாட்டு நாணயங்கள் 508- ம், கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கையாக எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்