“ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் யோகா” சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி சார்பில் சர்வதேச யோகா தின விழா
“ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் யோகா” சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி சார்பில் சர்வதேச யோகா தின விழா
சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி சார்பில் “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் யோகா” என்ற உலகளவிய தலைப்பை மையமாக கொண்டு சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது
ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தின விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு சர்வதேச யோகா தின விழாவை மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது. “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் யோகா” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நிகழாண்டு யோகா தின விழா கடைபிடிக்கப்படுகிறது. இதனை போற்றும் வகையில் சேலம் சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி சார்பில் சர்வதேச யோகா தின விழா கல்லூயின் விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது.
சோனா கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர் தியாகுவள்ளியப்பா தலைமையில் நடைப்பெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காவல்துறை காவல்ஆய்வாளர் வித்துன்குமார், ஆட்டையாம்பட்டி காவல்நிலையம், டாக்டர் சிவராம், லேப்ராஸ்கோபிக் மற்றும் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் டாக்டர் சங்கமித்ரா சிவராம் மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி உலகமே ஒன்று சேர்ந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறது. இந்த உலகளாவிய நிகழ்வு யோகாவின் பண்டைய இந்திய பயிற்சி மற்றும் உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வில் அதன் ஆழமான தாக்கத்தை அங்கீகரிக்கிறது என்று சோனா கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா தெரிவித்தார்.
இந்த விழாவில் சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் யோகா நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் கல்லூரியின் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் முதல்வர் டாக்டர்.தர்மசம்வர்த்தினி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.