கீரனூர் ஜும்ஆ பள்ளிவாசலில் பக்ரீத் பெருநாள் தொழுகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கீரனூர் ஜும்ஆ பள்ளிவாசலில் பக்ரீத் பெருநாள் தொழுகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது.

- Advertisement -

இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய 12-வது மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ஜும்ஆ பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பள்ளிவாசலில் இருந்து ஜமாத்தாக ஒற்றுமையின் சகோதர தத்துவத்தை வலியுறுத்தி கீரனூர் கடைவீதி வழியாக சென்று பள்ளிவாசலை வந்தடைந்தனர், பக்ரீத் பண்டிகை கொண்டாடிய முஸ்லிம்கள், ஏழை மக்களுக்கு குர்பானியாக ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சியை தானமாக அளித்தனர்.

ஈத்கா மைதானத்தில் நடைபெற இருந்த பக்ரீத் பண்டிகை மழையின் காரணமாக ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்