திருச்சியில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்!
பஞ்சாப் காவல்துறை & மத்திய அரசின் துணை ராணுவம் இணைந்து பஞ்சாப்பில் விவசாய சங்க தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை கண்டித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர், மாநில தலைவர் அய்யாகன்னு தலைமையில், நேற்று காலை திருச்சி காவிரி பாலத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த திடீர் ரயில் மறியல் போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
Comments are closed.