தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. கூலிப்படையினர் அதிகமாகிவிட்டனர் – டிடிவி!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற தொகுதி வாரியான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக
டிடிவி செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…

2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பணிகளை தொடங்குவதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

சிபிஎம் மாநில தலைவர் சொன்ன கருத்து தான் இங்கு ஒரு அனைத்து கட்சியினுடைய கருத்துக்களும், ஹிட்லர் பாணியில் முதலமைச்சர் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதற்கான வெளிப்பாடாக உள்ளது.

சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கிறது. அதனால் தான் அனைத்து எதிர்கட்சிகளும் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது குறிப்பாக எடப்பாடி ஆட்சியில் எதிர் கட்சியாக இருந்தபோது கொரோனா காலங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மற்ற கட்சிகள் அரசாங்கம் சரியாக செயல்பட வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள். மேலும் காவல்துறை ஏவல் துறையாக செயல்படக் கூடாது என்று ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் பேரணிகள் நடைபெற்றது. இந்த போராட்டங்கள் எல்லாம் நாடகம் என்று திமுக கூறுகிறார்கள். அதற்கு காரணம் திமுகவினர் கதை எழுதி நாடக நடத்தி வளர்ந்த கட்சி திமுக தவறான முன்னுதாரணமாக இருக்கிறது. எனவே தான் தோழமை கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி கடந்த ஒரு வார காலமாக வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசாங்கமே இவ்வளவு தூரம் ஏன் அச்சமடைகிறது ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்பது முன்வைக்கப்படுகிறது. திமுகவில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தான் கோட்டூர்புரம் பகுதியில் இருக்கும் பலர் கூறுகிறார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. கூலிப்படையினர் அதிகமாகிவிட்டனர். அதற்கு தமிழக முதல்வர் தான் காரணமாக இருக்கிறார்.

போதை மருந்து பழக்கத்திற்கு ஆளானவர்கள் கூலிப்படையினராக மாறி 5ஆயிரம் 10ஆயிரத்துக்கும் கொலை கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். அதை கடுமையாக தடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை திசை திருப்பும் விதமாக திமுக செயல்படுகிறது.

- Advertisement -

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சியே எமர்ஜென்சி கொண்டு வருவது போல் இருப்பதாக கூறியது தமிழக முழுவதும் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை என்பது ஒரு பக்கம், விலைவாசி உயர்வு என்பது ஒரு பக்கம் இருக்கும் நிலையில் தமிழகத்தில் திமுக கட்டாயம் 200 தொகுதிகள் எல்லாம் ஜெயிக்க முடியாது.

துரைமுருகன் டெல்லி சென்றிருப்பது மறைமுகமாக பின் வாசல் வழியாக சென்ற கதவை தட்டுவது தான் மேடையில் வீர வசனம் பேசுவார்கள். அவருடைய பித்தலாட்டங்கள் கட்டாயம் பழிக்காது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை நல்ல காவல் துறை அதிகாரிகளை வைத்து விசாரணை செய்யலாம். ஆனால் திமுக விரும்புவது போல் விசாரணை நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது போன்று தமிழ்நாட்டில் இனி ஒரு சம்பவம் கூட நடக்கக்கூடாது.

அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இந்த சூழ்நிலையில் ஒன்றிணைைய வேண்டும். இந்த ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய திமுகவை, தீய சக்தியை வெல்ல வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணி தான் சரியானது.

திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர விடக்கூடாது என்று நினைக்கும் அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதுதான் கருத்து.

பாஜகவள் மீண்டும் வெற்றி பெற முடியாது என்று கூறுவது தவறானது 2019ல் இருந்த வாக்கு வங்கி என்று 2021 இல் இல்லை எனவே எங்களுடைய கூட்டணி வலுப்பெற்று வருகிறது. பலமாக இருந்த காங்கிரஸ் கட்சியை திமுக வீழ்த்தவில்லையா
பாரதிய ஜனதாவை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள்
மகாராஷ்டிராவில் எவ்வளவு விமர்சனங்கள் வைத்தாலும் இன்று மூன்றாவது முறை பாஜக ஆட்சியைப் பிடித்து மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆகியிருக்கிறார்.

பழனிச்சாமி திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை இரட்டை இலையை கையகப்படுத்தி உள்ளார். அம்மாவின் கட்சியை கபிலிகரம் செய்துள்ளார். அவரிடம் இரட்டை இலை இருப்பதால் பலர் ஏமாந்து வருகின்றனர். 2026 அம்மா கட்சிக்கு முடிவுரை எழுதி விடுவார். கட்சியை அவர் வணிக ரீதியாக வியாபாரமாக பயன்படுத்துகிறார்கள்.

பழனிச்சாமி இன்று வரை தப்பிக்க காரணம் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் தான் அவர் தனியாக போட்டியிட வேண்டும் என்று தீர்மானத்துடன் இருக்கிறார். 2026க்கு பிறகு கட்சி எப்படி இருந்தால் என்ன எப்படி போனால் என்ன என்ற மனநலையோடு இருக்கிறார் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்