திருச்சி மாவட்டத்தில் ₹.8.43 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்களை காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்!

திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ரூ.8.43 கோடி மதிப்பீட்டில் 5 பள்ளிகளில் கட்டப்பட்ட 37 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் 1 கூடுதல் ஆய்வகக் கட்டிடத்தை, தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சிறுகாம்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து, புதியதாக திறக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் பள்ளி வளாகத்தை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக, சிறுகாம்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நாகவேலு, உதவி செயற்பொறியாளர் கார்த்திக்கேயன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்