திருச்சி காதிகிராப்ட்டில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!
அண்ணல் காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி இரயில் நிலையம் எதிரில் உள்ள காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவி மரியாதை செலுத்தி, குத்து விளக்கேற்றி வைத்து, தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், காதிகிராப்ட் உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், நகரப்பொறியாளர் சிவபாதம் மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.