வடலூர் சபையில் பன்னாட்டு மையம் அமைக்க கூடாது – தெய்வத்தமிழ் பேரவையினர் திருச்சியில் உண்ணாவிரதம்!

தமிழ்நாடு அரசு நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு மையக் கட்டடங்களை எழுப்பி, வடலூர் சத்திய ஞான சபையைச் சிதைக்காமல், அதற்கு வெளியே வேறு இடத்தில் அக்கட்டடங்களைக் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வள்ளலார் பணியகம், தெய்வத் தமிழ் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

Bismi

அந்த வகையில் திருச்சி ரயில்வே ஜங்சன் காதிகிராப்ட் அருகே இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தெய்வத் தமிழ் பேரவையின் மாவட்ட அமைப்பாளர் இராமராசு தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திருக்குறள் முருகானந்தம், இராஜயோக சித்தர் பீடம் வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார் மற்றும் வள்ளலார் பணியகம் மற்றும் தெய்வத்தமிழ் பேரவை அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்