திருச்சி மாவட்ட வருவாய்த்துறையின் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு இலவச பட்டா மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நடராஜபுரம், அரசங்குடி, கிருஷ்ணசமுத்திரம், வாழவந்தான்கோட்டை, திருநெடுங்குளம், பத்தாளபேட்டை ஊராட்சிகளின் கிராமப் பகுதியில் வசிக்கும் ஏழைகள் சுமாா் 872 பேருக்கு இலவச பட்டா வழங்கினார். தொடர்ந்து நடராஜபுரம் ஊராட்சி கச்சோந்தி மலை கிராமத்தில் வசிக்கும் 9 போ் உள்பட 78 நபா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மேலும் திருச்சி மாநகராட்சி காட்டூா் 43 வது வாா்டிலுள்ள கலைஞா் தெரு திருவள்ளுவா் நகரில் வசிக்கும் சுமாா் 100 பேருக்கும் பட்டா வழங்கப்பட்டது. இதேபோல வேளாண் துறை சாா்பாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, மண்டலக் குழுத் தலைவா் மதிவாணன் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.