பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் சாலையோரம் உள்ள மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் சாலையோரம் உள்ள மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.


பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சாலையோர மக்களுக்கு உணவு வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று தலைமை நிர்வாக குழு ஆணைக்கிணங்க
நிறுவனர் தலைவர் வேல்முருகன் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது ஒருங்கிணைப்பில்,மாநில ஆலோசகர் விஜயபிரேமா முன்னிலையில் சேலம் மாவட்ட தலைவர் பிரவீன்குமார் ஏற்பாட்டில் துணைத்தலைவர் அருள்குமார், செயலாளர் கோகுல்ராஜ், துணைசெயலாளர் ஸ்ரீனிவாசன் சேலம் மாவட்டம் மகளிர் அணி செயலாளர் ரேணுகா, துணைச்செயலாளர் பிரியதர்ஷினி, கீதா, நளினி பொறுப்பேற்று சிறப்பாக மகளிர் தினம் விழா கொண்டாடப்பட்டது.


விழாவில் சிறப்பு விருந்துனராக தர்மபுரி மாவட்டம் துணை அமைப்பாளர் வசந்தி, கொள்கை பரப்பு அமைப்பாளர் மங்கா, துணைத்தலைவர் நாகர்ஜூன், துணை செயலாளர் ராமகிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர், விழாவில் 100 சாலையோர மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மற்றும் மாதாந்திர கூட்டத்தில் மகளிர் அணிகள் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடினர்.
மாதாந்திர கூட்டத்தில் மே மாதம் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் நாடகம், நடனம், கவிதை வாசிப்பது என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




