திருச்சி 9A வட்ட கழக அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா – மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார் பங்கேற்பு!
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருச்சி அதிமுக 9A வட்ட கழகம் சார்பில், அண்ணாசிலை ஓடத்துறை பகுதியில் வட்ட செயலாளர் ராஜ் மோகன் தலைமையில் எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் L.முத்துக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் ராதா வேங்கடநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சலீம் மற்றும் பிரசாந்த் ஆகியோர் செய்திருந்தனர்.




மேலும் இந்நிகழ்வில் ரமேஷ் ராஜா, A.S.தில்லைநாதன், P.தமிழ்ச் செல்வி, K.ஜோதி, V.ராஜ், N.செல்வி, குவைத் மனோகர், S.ரெங்கராஜ், M.பிச்சை பாய், A.சிந்தாமணி பாஸ்கர், ரமணி லால், வெங்கடேசன், S.ஆசாரி முருகன், A.இளங்கோ, G.விஜய் குமார், தராசு ராஜா, V.வித்யா, முத்து லெட்சுமி, கோமள வள்ளி, பிரியா , J.விஐய், பிரேம், H.U விக்கி, G. கிஷோர், V.பிரசன்னா, G.விக்கி, B. விக்னேஷ், M.பிரகதீஸ்வரன் , R.அருண் , P.சசிக்குமார், M.கோபி , M.நவின், விஜயகுமார், பாண்டி, திலிப், மனோகரன், சூரியா, ஹரி, விக்னேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .




