திருச்சியில் ஓய்வுபெற்ற காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் 13 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது!

0

திருச்சி மாவட்ட ஓய்வுபெற்ற காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் 13 ஆம் ஆண்டு விழா மற்றும் ஓய்வூதியர் தின விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

- Advertisement -

நிகழ்விற்கு திருச்சி மாவட்ட செயலாளர் ரமணி வரவேற்புரையாற்றினார். திருச்சி மாவட்ட தலைவர் துரைசாமி தலைமையேற்று, தலைமை உரையாற்றினார். முன்னாள் மாநில தலைவர் சுதந்திரராஜன், தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்த சிராஜுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் அம்பிகா சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை வாசித்தார். இறுதியாக பி.ராஜா நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியை பழனிசாமி தொகுத்து வழங்கினார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்