நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்! தவெகவுக்கு மாபெரும் உறுதுணை- த.வெ.க தலைவர் விஜய்

நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்!  தவெகவுக்கு மாபெரும் உறுதுணை- த.வெ.க தலைவர் விஜய்

சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைவர் விஜய் முன்னிலையில் த.வெ.க. வில் இணைந்தனர்.த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன் மற்றும் அவருடன் அதிமுக முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களுக்கு த.வெ.கவின் உறுப்பினர் அட்டையை விஜய் வழங்கினார்.

Bismi

செங்கோட்டையனுடைய அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும்” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தனை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது:
வணக்கம் , 20 வயது இளைஞராக இருந்தபோது எம்ஜிஆரை நம்பி, அவருடைய மன்றத்தில் சேர்ந்தவர். அந்த சிறிய வயதிலேயே எம்எல்ஏ என்ற ஒரு பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன் பிறகு அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் மிகப்பெரிய இருபெரும் தலைவர்களுக்கு உறுதுணையாக அரசியல் களத்தில் இருந்தவர்.இப்படி 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையனுடைய அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவரையும், அவருடன் இணைந்த மற்றவர்களையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்