திருச்சியில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விற்பனை!காந்தி மார்க்கெட்டில் குவியும் பொதுமக்கள்!
திருச்சியில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விற்பனை!காந்தி மார்க்கெட்டில் குவியும் பொதுமக்கள்!

திருச்சி:

நாளை விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி காந்தி மார்க்கெட்டில் விநாயகர் சிலைகள், பழங்கள், பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பண்டிகையை முன்னிட்டு பொருட்களை வாங்க அதிகாலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் மார்க்கெட்டில் குவிந்து வருகின்றனர்.

பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விலை நிலவரம்
ஆப்பிள்: ₹200 / கிலோ
மாதுளை: ₹180 / கிலோ
வாழைப்பழம்: ₹160 / சீப்பு/கிலோ
கொய்யாப்பழம்: ₹120 / கிலோ

திராட்சை: ₹100 / கிலோ
சாத்துக்குடி: ₹60 / கிலோ
வாழைக்கன்று: ₹60 (ஒரு ஜோடி)
கரும்பு துண்டு: ₹20

சிலை விற்பனை நிலவரம்
வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் ₹100 முதல் கிடைக்கின்றன. பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யக்கூடிய பிரம்மாண்ட சிலைகள் ₹15,000 வரை பல வடிவங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பூக்கள் சந்தை நிலவரம்
மதுரை உள்ளிட்ட முக்கிய உற்பத்தி மையங்களிலிருந்து பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் சில வகை பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது; வரத்து சீராக உள்ள பூக்களின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. பழங்கள், பூக்கள் மற்றும் அலங்கார பொருட்களின் வர்த்தகம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் ஒட்டுமொத்த காந்தி மார்க்கெட் பகுதியும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
#VinayagarChathurthi #Tiruchirappalli #TrichyGandhiMarket #TrichyNews #GaneshChaturthi #MarketUpdates #TamilNaduNews





Comments are closed.