திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை, எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை, எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
திருச்சி தெற்கு மாவட்ட திமுக BLA2 பாக நிலை முகவர்கள் கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் திருச்சி திமுக தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த BLA2 பாகநிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு,
திமுகவில் உறுப்பினர்களை சேர்ப்பது, தேர்தல் பணியாற்றுவது குறித்து பாக நிலை முகவர்களுக்கு எடுத்து கூறினோம். அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் பஞ்சபூர் பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
அதிமுக பாஜக வுடன் கூட்டணி சேர்ந்ததை அதிமுக தொண்டர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி.
திமுக கூட்டணியில் புகைச்சல் இல்லை, எங்கும் புகை வரவில்லை. எங்கள் கூட்டணி சுமூகமாக இருக்கிறது. எங்கள் கூட்டணியில் ஏதாவது பிரச்சனை வரவேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்குள்ளாக தான் பிரச்சனை இருந்து வருகிறது.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து திமுக தலைவர் முடிவெடுப்பார்.
பவன் கல்யாண் ஆந்திராவில் நிலவும் பிரச்சனைகளை பார்க்கட்டும். அவர் தமிழ்நாட்டிற்கு வந்து கருத்து கூற வேண்டாம் மைக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேச கூடாது என்றார்.
Comments are closed.