போதையால் மாறும் பாதை விழிப்புணர்வு நிகழ்ச்சி பாய்லர் பிராண்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல இயக்கங்களின் சார்பில் நடைபெற்றது
போதையால் மாறும் பாதை விழிப்புணர்வு நிகழ்ச்சி பாய்லர் பிராண்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல இயக்கங்களின் சார்பில் நடைபெற்றது

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகாவில் உள்ள


( BHEL ) பாய்லர் பிராண்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள போதைப் பொருட்கள் எதிர்ப்பு குழு மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் திருவெறும்பூர் மற்றும் ஆத்மா மனநல மருத்துவமனை திருச்சி இணைந்து “” போதையால் மாறும் பாதை”” என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது,

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை தாங்கினார் மற்றும் செல்வராஜ் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் நிறுவனர் அவர்கள் முன்னிலை வகித்தார், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆத்மா மனநல மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் கரன் லூயிஸ் அவர்கள் சிறப்புரை வழங்கி போதை பழக்கத்தால் ஏற்படும் உடல் நலம் பாதிப்பு மற்றும் மனநலம் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கினார், பள்ளியின் பொருளியல் ஆசிரியர் சிவசுப்பிரமணியன் அவர்கள் நன்றியுரை வழங்கினார், இந்நிகழ்ச்சியில் பல்வேறு ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், 11 ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்






Comments are closed.