மக்களவை தேர்தல் வாக்குபதிவு, மாகாவீர் ஜெயந்தி, மே தினத்தை முன்னிட்டு திருச்சியில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுபான விற்பனை கடைகள் 17.04.2024 அன்று காலை 10.00 மணி முதல் 19.04.2024 (வாக்குபதிவு நாள்) இரவு 12.00 மணி வரை மற்றும் 21.04.2024 மகாவீர் ஜெயந்தி மற்றும் 01.05.2024 மே தினம் ஆகிய தினங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது….

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் 2024 – ஐ முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள், FL2 முதல் FL II பார்கள் (FL-6 நீங்கலாக) அனைத்தும் 17.04.2024 அன்று காலை 10.00 மணி முதல் 19.04.2024 (வாக்குபதிவு நாள்) இரவு 12.00 மணி வரை மற்றும் 21.04.2024 மகாவீர் ஜெயந்தி மற்றும் 01.05.2024 மே தினம் ஆகிய தினங்களில் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.

மேலும், அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.





I saw one of these in Libya and I bought one.
heard about this on gypsy jazz radio, decided to give it a try.
My terrier loves to play with it.
this product is complimentary.