சிப்காட் விவகாரம் – திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்!

0

திருவண்ணாமலை சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அதுவரை எங்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் முக்கிய நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். கோரிக்கை மனுவை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

- Advertisement -

தொடர்ந்து விவசாயிகள் சங்க தலைவர் அய்யா கண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில்…

சிப்காட் தொழிற்பேட்டை விவகாரத்தில் விவசாயிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

பேட்டி – அய்யாகண்ணு
மாநில தலைவர், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்