சிறுமருதூரில் ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் பனை விதை நடும் திருவிழா: லால்குடி தன்னார்வலர்கள் பங்கேற்பு!
சிறுமருதூரில் ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் பனை விதை நடும் திருவிழா: லால்குடி தன்னார்வலர்கள் பங்கேற்பு!
திருச்சி லால்குடி:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் உன்னத நோக்கோடு, ‘வி தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் சார்பில் பனை விதைகள் நடும் விழிப்புணர்வு இயக்கம் சிறமருதூர் கிராமத்தில் நடைபெற்றது.

லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிறுமருதூர் கிராமத்தின் பங்குனி வாய்க்கால் கரைகளில், 13.09.2026 அன்று காலை நடைபெற்ற இந்நிகழ்வில், நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வகையிலும் மண் அரிப்பைத் தடுக்கும் வகையிலும் ஏராளமான பனை விதைகள் ஆர்வத்துடன் நடப்பட்டன.

இப்பணிக்கு வலுசேர்க்கும் விதமாக லால்குடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் தன்னார்வலர்களும் ஒன்றிணைந்தனர்.
லால்குடி பகுதி: A.S. கார்த்திகேயன், காந்தி மார்க்கெட் S. வெங்கடேஷ், லால்குடி நகர் பகுதியைச் சேர்ந்த B. கார்த்திகேயன், J. கார்த்திகேயன்.
வாளாடி பகுதி: M. வெங்கடேஷ், S. ராஜேஷ்குமார், L. நவநீதகிருஷ்ணன்.
பிற பகுதிகள்: பி.கே. அகரம் செந்தில்குமார் மற்றும் தீபன் பரணி.
மண்ணின் வளம் காக்கவும், எதிர்கால சந்ததியினரின் நலன் கருதியும் முன்னெடுக்கப்பட்ட இந்த பசுமை முயற்சியை அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் வெகுவாகப் பாராட்டினர். தொடர்ந்து நீர்நிலைகளின் கரைகளில் பனை மரங்களை நட்டுப் பராமரிக்கப் போவதாக தன்னார்வலர்கள் உறுதியேற்றனர்.





Comments are closed.