காவேரி மருத்துவமனை – தலைசுற்றல் (Syncope) சிறப்பு கிளினிக் தொடக்கம் திருச்சி
காவேரி மருத்துவமனை – தலைசுற்றல் (Syncope) சிறப்பு கிளினிக் தொடக்கம் திருச்சி
திருச்சி காவேரி மருத்துவமனை, புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருப்பதுடன், இப்பொழுது தலைசுற்றல் (Syncope) பிரச்சனையுடன் வருகை தரும் நோயாளிகளுக்கான முழுமையான மதிப்பீட்டிற்காக தனிப்பட்ட கிளினிக்கையும் தொடங்கியுள்ளது.
இந்த சிறப்பு கிளினிக் 2025 ஆகஸ்ட் 24ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் ஏ.வி. சுப்ரமணியன் மற்றும் புகழ்பெற்ற எலெக்ட்ரோபிசியாலஜிஸ்ட் டாக்டர் உலாஸ் எம். பாண்டுரங்கி அவர்களால் தொடக்கமிடப்பட்டது.

இந்நிகழ்வில் டாக்டர் வெங்கிடா சுரேஷ் (குழு மருத்துவ இயக்குநர்), டாக்டர் செந்தில் குமார், டாக்டர் செங்குத்துவன் (காவேரி மருத்துவமனை செயல் இயக்குநர்கள்), டாக்டர் ஜவாஹர் பாரூக் (TANCSI – தமிழ்நாடு இந்திய இருதயவியல் சங்கத் தலைவர்), டாக்டர் ஜோஸ் ஜாஸ்பர் (நரம்பியல் துறை தலைவர்), மற்றும் டாக்டர் ஜோசப் (முன்னணி எலெக்ட்ரோபிசியாலஜிஸ்ட்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைத்து முக்கிய விருந்தினர்களும், தலைசுற்றல் பிரச்சனையுடன் வருகை தரும் நோயாளிகளுக்கான முழுமையான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக இந்த தனிப்பட்ட கிளினிக் மிகுந்த பயனளிக்கும் எனக் குறிப்பிட்டனர். இந்த கிளினிக்கில் மருத்துவர்கள், நரம்பியல் நிபுணர்கள், இதய நிபுணர்கள் மற்றும் காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் ஒன்றிணைந்து சேவையளிக்க உள்ளனர்.
மேலும், அடிப்படை தானாக இயங்கும் பரிசோதனை (Autonomic Test), ஹோல்டர் (Holter), எலெக்ட்ரோபிசியாலஜி பரிசோதனைகள் மற்றும் டில்ட் டேபிள் பரிசோதனை போன்ற சிறப்பு பரிசோதனைகள் மூலம், தலைசுற்றலுக்கான காரணங்களை (சாதாரணம் முதல் உயிருக்கு ஆபத்தான நிலைகள் வரை) கண்டறிந்து, சரியான சிகிச்சை மற்றும் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துவதே நோக்கம்..


Comments are closed.