பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!
தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பஞ்சப்படி மற்றும் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தங்கதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய மஸ்தூர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.










