- Advertisement -

பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்து பயணம் செய்த நபர்கள் திருச்சியில் கைது!

0

- Advertisement -

ஓமன் நாட்டிலிருந்து ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப் பிரிவு போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில், அரியலூா் மாவட்டம், செம்மந்தகுடி கருப்பூா் கிராமத்தை சோ்ந்த பரமசிவம் (51) என்ற பயணி, அவரது பெயரை முத்துசாமி (51) என போலி ஆவணங்கள் மூலம் மாற்றி கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை பெற்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து பரமசிவத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதேபோல மற்றொரு விமானத்தில் வந்த, மதுரை மாவட்டம் மேலூரைச் சோ்ந்த காா்த்திக் (27) என்ற பயணி, அவரது கடவுச்சீட்டில் அவா் ஓமனுக்கு புறப்பட்டுச் சென்ற தேதியை திருத்தம் செய்து மாற்றியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காா்த்திக்கை கைது செய்த போலீஸாா் பின்னா் சொந்த பிணையில் விடுவித்தனா்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்