சீமான் மீது கொடுத்த புகார் விசாரணைக்கு உகந்தது -ஜூலை 7ம் தேதி சீமான் நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு

சீமான் மீது கொடுத்த புகார் விசாரணைக்கு உகந்தது -ஜூலை 7ம் தேதி சீமான் நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு

 

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணை இன்று மதியம் 3 மணிக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது

- Advertisement -

இந்த வழக்கு தொடர்பாக இரண்டு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த முறை இந்த வழக்கு இந்த நீதிமன்றத்தில் விசாரிக்க உகந்தது அல்ல என்று சீமான் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி சீமான் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை ஏற்றுக்கொண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

திருச்சி சரக டி ஐ ஜி கொடுத்த புகாரியில் முகாந்திரங்கள் இருப்பதாகவும் இந்த வழக்கை குற்ற வழக்காக மாற்றி விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக திருச்சி குற்றவியல் நான்கு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்