ராகுல் காந்தி தாத்தா காஷ்மீரை கொடுத்தார் அவர் பாட்டி கச்சத்தீவை கொடுத்தார் – பாஜக பொதுச்செயலாளர் ராம சீனிவாசன்

ராகுல் காந்தி தாத்தா காஷ்மீரை கொடுத்தார் அவர் பாட்டி கச்சத்தீவை கொடுத்தார் – பாஜக பொதுச்செயலாளர் ராம சீனிவாசன்

திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.. அப்போது..

பழனியில் நடைபெறும் முருகன் மாநாட்டில் அரசியல் நோக்கம் இல்லை. ஹிந்துகள் நோக்கில் ஒன்றிணைய வேண்டும். ஜாதிகள் இன்றி முருக பக்தியில் ஒன்றிணைய வேண்டும்.
ஒரே குரலில் 5 லட்சம் பேர் கந்த சஷ்டி சொல்லி சாதனை செய்ய உள்ளோம்.

மற்றவர்கள் பேசியதை தான் கமல் பேசி உள்ளார்.
கமல் மொழியியல் ஆய்வாளர் இல்லை. மக்களை புண்படுத்துவதாக இருந்தால் அதை அவர் திரும்ப பெற கொள்ளலாம்.
ஒரு மொழியியல் ஆராய்ச்சியாளராக இருந்து அவர் சோதனை செய்து காண்பித்தாள் பரவாயில்லை.

- Advertisement -

முருகன் தமிழ் கடவுள் மட்டும் இல்லை. கேரளாவில் நிறைய கோவில்கள் உள்ளன.
தமிழகத்தை தாண்டி முருகன் தெரியாது என்பது இல்லை.
நேரு காலத்தில் தான் காஸ்மீரில் 1 பங்கு போனது.
கொள்ளு தாத்தா காஸ்மீரை கொடுத்தார். அவர் பாட்டி கச்சத்தீவை கொடுத்தார். பேரன் இவர் மீட்பேன் என சொல்வது எப்படி நியாயம்.

70 வருடமாக காஸ்மீரை மீட்பது தான் பாகிஸ்தான் நோக்கம். காஸ்மீர் பாக்கிஸ்தான் நாட்டுடையது என எந்த நாடும் கூறவில்லை. காஸ்மீர் இந்தியாவுடையது என்கின்றனர்.அதற்கு காரணம் பிரதமர் மோடி தான்.

பின்லேடன் உள்ளிட்ட உலக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது பாக்கிஸ்தான் தான்.

RCB வெற்றிக்கு,
தமிழக முதல்வர் வாழ்த்துக்களை வரவேற்கிறேன். நானும் வாழ்த்துகிறேன். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும்.
விளையாட்டில் யார் வெற்றி பெற்றாலும் பாரத் மாதா கி ஜே தான் என்றார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாஜக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்