வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முஸ்லிம்கள் உரிமைகளையும், வக்ஃப் சொத்துக்களை பறிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் இன்று திருச்சியில் மாபெரும் பேரணி மற்றும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் சாலையில் இருந்து ம.ம.க மாநில பொது செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ தலைமையில் 1200 க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ம.ம.க துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா கண்டன கோஷம் எழுப்பி பேரணியை துவக்கி வைத்தார். மேலும் இப்போராட்டத்தில் தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லாஹ் கான், திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC, கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா, புதுகோட்டை மாவட்ட தலைவர் அப்துல் கனி, கரூர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது MC, பெரம்பலூர் மாவட்ட தலைவர் குதரதுல்லாஹ், அரியலூர் மாவட்ட தலைவர் சாகுல், மகளீர் பேரவை மாநில பொருளாளர் ஷான் ராணி ஆலிமா, தலைமை பிரதிநிதி வழ. நூர்தீன், தாஹீர் பாஷா, சுல்தான், ஐபிபி மாநில துணை செயலாளர் முகமது ரபிக்கா, ஐடி விங் மாநில துணை செயலாளர் நஜீர், தலைமை செயற்குழு உறுப்பினர் சபிர், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
தொடர்ந்து ம.ம.க பொது செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டம் பாரம்பரிய சொத்துக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 115 உள் திருத்தங்களுடன், வக்பு ஒழிப்புச் சட்டம் என்று கூறும் வகையில் உள்ளது. மேலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக பாரபட்சமான விதிகளை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. உச்ச நீதிமன்ற அமர்வு இந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளதை வரவேற்கிறோம். உச்ச நீதிமன்றத்தை முழுமையாக நம்புகிறோம். நாட்டில் அமைதி பாதிக்கப்படுவதுடன், சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்கள் பறிக்கப்படுகிறது. எங்கெல்லாம் பாசிச அமைப்புகள் மற்றும் ஆட்சிகள் இருக்கிறதோ அங்கு சிறுபான்மையின மக்களின் அடையாளங்கள் சிதைக்கப்படும் ஆபத்து உள்ளது. எனவே இந்த வக்ஃப் திருத்த சட்டத்தை அமல்படுத்த கூடாது. இந்த சட்ட திருத்தத்தை முழுவதுமாக திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
மேலும் இப்போராட்டத்தில் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளார்கள் இப்ராஹிம் ஷா, இலியாஸ், மமக மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம், அஷ்ரப் அலி, மாவட்ட பொருளாளர்கள் ஹூமாயூன் கபிர்காஜா மொய்தீன், தலைமை கழக நிர்வாகிகள் அப்பீஸ் கான், மண்டல நிர்வாகிகள் தல்ஹா பாபு, திருச்சி உஸ்மான், முகமது கான், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், மகளீர் பேரவை நிர்வாகிகள், ஜமாத்தார்கள், பொதுமக்கள், திரளாக பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர்.
Comments are closed.