பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்!
திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், தாளக்குடி அஞ்சல், பரஞ்ஜோதி நகர் வீட்டு எண் -14 என்ற பழைய முகவரி மற்றும் அகிலாண்டபுரம் P.S.நகர் என்ற புதிய முகவரியில் வசித்து வருபவர் சேகர் என்பவரின் மகன் ராஜேஷ். இவர் நிலம் வாங்கி அதில் வீடு கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் கடந்த 2022 ஆம் ஆண்டு
திருச்சி மாவட்டம், T.ஈச்சம்பட்டியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி
இளவரசன் (எ) அரசு என்பவரிடம்
புதிய வீடு கட்டி தர வேண்டும் என கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் இளவரசன் வீடு கட்டுவதற்கு ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து தாளக்குடி P.S.நகர், சக்திநகர், ரெங்காகார்டன், ஆகிய பகுதியில் மொத்தமாக 16-கட்டிடம் வீடு கட்டுவதற்கு ஒப்பந்தம் போட சொன்னபோது ராஜேஷ் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இளவரசன் 45 கூலி தொழிலாளர்களை வைத்து மூன்று ஆண்டு காலமாக வேலை செய்து 16 கட்டிடங்களையும் கட்டி முடித்தார். இதில் மொத்தமாக ரூ.93,60,000 தொகையை பேசி அதில் ரூ.50,00,000 தொகையை ராஜேஷ் இடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார். மீதமுள்ள ரூ.43,60,000 தொகையை கேட்டபோது இளவரசனை ஆபாச வார்த்தைகளால் திட்டி, இனிமேல் பணம் கேட்டு வந்தால் கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இளவரசன் கொள்ளிடம் காவல் நிலையத்தில் கடந்த 05.04.2025 அன்று புகார் கொடுத்துள்ளார். இதுக்குறித்து கொள்ளிடம் காவல்நிலைய காவலர் உதவி ஆய்வாளர் ஜெகதீஷ் விசாரித்த போது, ராஜேஷ் பணம் கொடுக்க வேண்டும் என்று தெரியவந்தது. அதனை தொடர்ந்து 21.04.2025 அன்று ராஜேஷ் என்பவரிடம் இருந்து பணம் வாங்கி கொடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து கடந்த 23.04.2025 அன்று போலீசாரிடம் இளவரசன் சென்று கேட்டபோது, பணம் வாங்கி கொடுக்க முடியாது என்றும், புகாருக்கு ஆதாரம் இருந்தால் கொடு என்று இளவரசனை காவல் துறையினர் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் ராஜேசுக்கு ஆதரவாக அதிமுக கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் மூலம் தொடர்ந்து இளவரசனுக்கு கொலை மிரட்டல் வந்தததால் பெரும் அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளவரசன் மற்றும் அவருடன் பணியாற்றிய 10-க்கும் மேற்பட்டோர், தங்களுக்கு தரவேண்டிய பாக்கி தொகை ரூ.43,60,000 தொகையை ராஜேஷ் என்பவரிடம் இருந்து மீட்டு தரும்படியும், மேலும் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மிரட்டியதுக்கும், பணத்தை மோசடி செய்து பதுக்கி வைத்த ராஜேஷ் என்பவர் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இன்று புகார் மனு அளித்தனர்.
Comments are closed.