திருச்சி மாநகரில் வடமாநிலத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது!
இந்தியாவில் வடமாநிலங்களில் குளிர்காலம் முடிந்து கோடை காலத்தை (வசந்தகாலத்தை) வரவேற்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் மாதத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதன்படி, திருச்சி மாநகரில் வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளான பெரிய கம்மாளத் தெரு, சின்ன கம்மாளத் தெரு, சின்ன செட்டித்தெரு, நடு குஜிலித் தெரு, ஜாபர் ஷா தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹோலி பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது சிறுவர், சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் ஒருவர் மீது மற்றொருவர் வண்ணப்பொடிகளைத் தூவியும், உடலில் பூசியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
Comments are closed.