கோரிக்கைகளை காலதாமதப்படுத்தினால் வரும் 22 ஆம் தேதி சென்னையில் போராட்டம் – தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் பணியாற்றி வரும் 7,374 கௌரவ விரிவுரையாளர்களின் நீண்ட கால கோரிக்கையான பணி நிரந்தரம், யுஜிசி யின் அடிப்படை ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ  விரிவுரையாளர்கள் நலச்சங்கம் சார்பில்,  திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குனர் அலுவலகம் முன்பு, மண்டல செயலாளர் வேலு தலைமையில் இன்று ஆர்போட்டம் நடைபெற்றது. இதில் துணைச் செயலாளர் பிரகாஷ், மண்டல பொருளாளர் கோபிநாதன் மற்றும் திருச்சி, பெரம்பலூர், லால்குடி , திருவெறும்பூர், பெட்டவாய்த்தலை முசிறி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

- Advertisement -

தொடர்ந்து மண்டல செயலாளர் வேலு செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

உயர் நீதிமன்றம் எங்களுக்கு பணி நிரந்தரம் ஊதிய உயர்வு வழங்க சொல்லி தீர்ப்பளித்துள்ளது. எங்கள் நீண்ட கால கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மேலும் தமிழக அரசு காலதாமதப் படுத்தாமல் எங்களுடைய கோரிக்கை குறித்து உரிய முடிவை எடுக்க வேண்டும். மேலும் மாநில அரசு காலதாமதப் படுத்தினால் வருகின்ற 22ஆம் தேதி சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்