காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!
திருச்சி சிறுகனூர் கிராமத்தை சோ்ந்த இலக்கியாவுக்கும் (31) உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசனுக்கும் காதல் திருமணம் நடைபெற்று, இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிறுகனூரில் உள்ள தங்களது வீட்டுக்கு வந்த மகளை ஜன.23 முதல் காணவில்லை என இலக்கியாவின் பெற்றோர் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே சிறுகனூர் பகுதியில் காயங்களுடன் இலக்கியா சடலமாக கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த சிறுகனூர் போலீஸார் அவரது சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.