விமான நிலையங்களில் கடத்தலை தடுப்பதற்கு கூடுதலாக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளை நியமனம் செய்து முறையாக கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம் – சுங்கத்துறை முதன்மை ஆணையர் பேட்டி!
திருச்சி சுங்கத்துறை மற்றும் கலால் வரி, மத்திய ஜிஎஸ்டி அலுவலக வளாகத்தில் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு முதன்மை ஆணையர் விமலநாதன் கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து முதன்மை ஆணையர் விமலநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…
வரி ஏய்ப்பிணை தடுப்பதும், ஏற்றுமதி, இறக்குமதி ஊக்குவிப்பதும் இந்த துறையின் முக்கிய நோக்கமாகும். வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு மட்டும் 1181 கிலோ கஞ்சா, 100 கிலோ அசிஸ் ஆகிய 111 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இதுபோலவே தங்கம் கடத்தலை தடுக்கும் விதமாக விமான நுண்ணறிவு பிரிவினரால் 139 வழக்குகளும், அதில் 73 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டன . இது தவிர இரண்டு பெரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு வழக்கில் 7.61 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. மற்றும் ஒரு வழக்கில் ₹.1.83 கோடி மதிப்புள்ள 2.6 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இது திருச்சிராப்பள்ளி விமான நுண்ணறிவு பிரிவினராலும், மத்திய நுண்ணறிவு பிரிவினராலும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஒரு புறம் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் எங்களது துறை ஏற்றுமதி, இறக்குமதியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பெசிலிடேஷன் சென்டர்
ஒன்றை ஏற்படுத்த முடிவு செய்து, திருப்பூரில் அந்த பெசிலிடேஷன் சென்டர் கூடிய விரைவில் தொடங்கும்.
மேலும், தூத்துக்குடி துறைமுகத்தில் direct port entry அமைக்கப்பட உள்ளது. இது ஏற்றுமதி கண்டைனர்கள் நேராக துறைமுகத்திற்கு உள்ளே செல்வதற்கான வழிவகை செய்யும்.
அதேபோல் இறக்குமதியாகும் கண்டெய்னர்களில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றால், உடனடியாக இறக்குமதி உரிமையாளரிடம் நேரடியாக ஒப்படைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதே போலவே இரண்டு ஸ்பெஷலிட்டி சென்டர்கள் ஏற்கனவே மறைமலைநகர், தூத்துக்குடி பகுதியில் இயங்கி வருகிறது.
எங்க துறையின் முக்கிய நோக்கம் ஒருபுறம் ஏற்றுமதி, இறக்குமதிகளை ஊக்குவிப்பதும், மற்றொருபுறம் கடத்தலை தடுப்பதும் ஆகும்.
போதைப் பொருள் கடத்தல் என்பது இந்தியாவின் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியான்மர் பகுதியில் ஒப்பியம் விளைச்சல் சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் இருந்து தான் ஒப்பியம் இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக விமான நிலையம், துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏற்றுமதி, இறக்குமதி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விமான நிலையங்களில் கடத்தலை தடுப்பதற்கு கூடுதலாக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளை நியமனம் செய்து முறையாக கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தார்.
Comments are closed.