பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற மாற்றித் திறனாளிகள் கைது!

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை மாநில அரசு உயர்த்தி தர வேண்டும், மாநில அரசு சார்பாக வழங்கப்படும் சலுகைகளை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 80 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்