திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கமங்கலம் கள்ளிக்குடி மாணிக்கபுரம் சாலை மாணிக்கபுரம் அண்ணா நகர் பகுதியில் 920.00 லட்சத்திற்கு ஐந்து பாலங்கள் மற்றும் 131.00 லட்சத்திற்கு சிமெண்ட் சாலைகள் அமைத்திட நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கேஎன் நேரு அவர்களுக்கு நன்றி தெரிவித்து திட்ட பணிகளை மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன் துவக்கி வைத்தார்.

உடன் தலைவர் சரவணன், செயல் அலுவலர் சந்திரகுமார், துணைத்தலைவர் சங்கீதா மற்றும் அனைத்து பேரூராட்சி மாமன்ற உறுப்பினர்கள், சமயபுரம் கண்ணனூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி இறுதியில் அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகள் பாலம் கட்டினால் தங்களது வீடுகள் அனைத்தும் பறிபோகும், நாங்கள் சுமார் ஐம்பது, அறுபது ஆண்டுகாலம் இந்த பகுதியில் வசித்து வருகிறோம், எங்களது நிலைகளையும் யோசித்து முடிவு எடுக்குமாறு அனைவரும் ஒன்றிணைந்து மன்னச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினரிடம் தங்களது மனுக்களை அளித்தனர், மனுவைப் பெற்றுக்கொண்ட மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், பாதிக்கப்படும் குடியிருப்பு வாசிகளுக்கு இடமாகவோ அல்லது தனி வீடாகவோ அனைவருக்கும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.