திருச்சி மாவட்டம் அதுவத்தூர், குமார வயலூர் உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று, திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த அமைச்சர் நேரு, உடனடியாக அலுவலகத்திற்கு வந்து முற்றுகையில் ஈடுபட்ட மக்களிடம் கருத்துகளைக் கேட்டு, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியதை தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில்…
மாநகராட்சியுடன் இணைப்பதற்கு 100 நாட்கள் இருக்கிறது. எதிர்ப்பு தெரிவிக்கும் கிராமங்களை இணைக்க மாட்டோம் என தெரிவித்தார்.
Comments are closed.