திருச்சியில் அஸ்வின் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் மற்றும் பேக்கரி நிறுவனத்தின் சார்பில் 2025 புத்தாண்டை முன்னிட்டு புதுவிதமான கேக் வகைகள் அறிமுகம்!

பாரம்பரியமிக்க அறுசுவை இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அஸ்வின் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் மற்றும் பேக்கரி நிறுவனம் பெரம்பலூர் மாவட்டத்தில் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னை, புதுச்சேரி, திருச்சி, திண்டிவனம், சேலம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ஆத்தூர், கிருஷ்ணகிரி, துறையூர், முசிறி, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், வெளிநாடுகளிலும் அஸ்வின் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் மற்றும் பேக்கரி இயங்கி வருகிறது.

மேலும் திருச்சி ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், வயலூர் சாலை, கேகே நகர், திருவெறும்பூர் ஆகிய ஆறு கிளைகளுடன் இயங்கி வந்த அஸ்வின்ஸ் நிறுவனத்தின் ஏழாவது கிளையை திருச்சி சாஸ்திரி ரோடு பகுதியில் தொடங்கியுள்ளது. மேலும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற அஸ்வின் ஸ்வீட்ஸ் இனிப்பு, கார, கேக் வகைகளில் தனக்கென தனி பாணியை உருவாக்கி லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

- Advertisement -

ஆண்டு தோறும் பல்வேறு வகைகளில் நாவினிக்கும் சுவையில் இனிப்பு, கேக் வகைகள் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வருகிற புத்தாண்டை முன்னிட்டு, 2025 ஆம் ஆண்டின் புதிய வரவாக பேரீட்சை பழ கேக் மற்றும் நெய் கேக் வகையை அறிமுகம் செய்துள்ளனர். தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அஸ்வின் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் மற்றும் பேக்கரி நிறுவனத்திற்கு தங்களின் ஆதரவை தொடர்ந்து தரும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கேக் வகைகளை பொது மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்