அன்னை டிரஸ்ட் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கம் பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது.

0

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் அன்னை டிரஸ்ட், பொன் கிரிஸ்டல் நிதி நிறுவனம், கல்லுாரியின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை, மற்றும் தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் நீர் மற்றும் சுகாதாரத்திற்கான கூட்டமைப்பு இணைந்து 22 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் குடிநீர் பாதுகாப்பு மற்றும் அதன் பின்னடைவில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த மாநில அளவிலான கருத்துப்பட்டறை நடைப்பெற்றது. இவ்விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற சுப்புராமன், தாமோதரன் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் திரு.கோவிந்தராஜ் ஆகியோரை கௌவுரவப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூடில் பாதுகாப்பு, நீர் வளத்தை பாதுகாப்பது மற்றும் இயற்கை சூழ்நிலையை மீட்டெடுப்பது பற்றி துறை வள்ளுநர்கள் ஆலோசித்தனர்.

- Advertisement -

இந்நிகழ்ச்சியில் அன்னை டிரஸ்ட் நிறுவனர் ஞானசேகரன், கல்லூரி முதல்வர் முனைவர். பால் தயாபரன், அன்னை டிரஸ்ட் இயக்குனர் மற்றும் பொன் கிரிஸ்டல் நிதி நிறுவன சிஇஓ திருமதி மேகலா, கடலூர் கிரீடு தொண்டு நிறுவன தலைவர் நடனசபாபதி, விருதுநகர் நீட்ஸ் தொண்டு நிறுவன நிறுவனர் ராஜகோபால், இந்தோ தொண்டு நிறுவன இயக்குனர் மற்றும் ஹைட்ரொலக் நிறுவன தலைவர் முஹம்மது ஹுசைன், திரு பக்தவச்சலம் செயல் இயக்குனர், பிஷப் ஹீபர் கல்லூரி சுற்றுச்சூழல் அறிவியல் துறை முனைவர் ரவிச்சந்திரன், மற்றும் முனைவர். டெய்சி கரோலின் மேரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்