திருச்சி மாவட்டத்தில் தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்!
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது….
திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் வேலைாப்பு பயிற்சித்துறை சார்பில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் தொழிற் பழகுநர்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக, திருச்சி மாவட்டத்தில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் 11.11.2024 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் திருச்சி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில நடைபெற உள்ளது. இந்த சேர்க்கை முகாமில் இதுவரை தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சி பெறாதவர்களை மற்றும் 2018-19, 2019-20, 2020-21, 2021-22 ஆகிய வருடங்களில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் ஐடிஐ பயிற்சியாளர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் (ஆண் பெண் இருபாலரும்) கலந்து கொள்ளலாம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர்கள் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின் போது உதவித்தொகை மாதம் 7000/-முதல் 10,000/நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழிற்பழகுநர் சட்டம் 1961ன் படி இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற் பழகுனர் பயிற்சி பெறுபவர்களுக்கு
மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். எனவே மாணவர்கள் இந்த சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய திருவெறும்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2553314 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.