திருச்சி வீரமலைப்பாளையத்தில் நவ.13,14 துப்பாக்கி சுடும் பயிற்சி – பொதுமக்கள் பிரவேசிக்க வேண்டாம் – கலெக்டர் தகவல்!
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது…
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் 13.11.2024 ஆம் தேதி முதல் 14.11.2024 ஆம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை RTC, CRPF மற்றும் PERIGOME GROUP UNIT பயிற்சியாளர்களால் துப்பாக்கி கடும் பயிற்சி நடைபெற இருப்பதால், அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.