திருச்சியில் “இரத்தசோகை இல்லாத கிராமம்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா!

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் வட்டார அளவில் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகளில் முதல் பரிசு பெற்ற சுய உதவிக் குழுக்களை கொண்டு தற்போது மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி “இரத்த சோகை இல்லாத கிராமம்” என்ற தலைப்பில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக சிறுதானியங்கள் மற்றும் பரம்பரிய உணவு திருவிழாவில் வட்டார அளவில் முதலிடம் பிடித்த 14 சுயஉதவிக்குழுவினர் இப்போட்டியில் பங்கு பெற்றனர். மேலும் இந்த உணவுத் திருவிழாவில் சிறுதானியங்கள் மற்றும் பரம்பரிய முறையில் உணவுகளை சமைத்து காட்சிப்படுத்தினர். இந்த கண்காட்சியை திட்ட இயக்குநர் சுரேஷ், திட்ட இயக்குநர் கங்காதாரணி ஆகியோர் தொடங்கி வைத்து கயாடதவிக்குழுக்கள் தயாரித்த சிறுதானியங்கள் மற்றும் பரம்பரிய உணவு பொருட்களை பார்வையிட்டனர். இந்நிகழ்வில், சமூகநல அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் நித்யா, உதவித்திட்ட அலுவலர்கள், மாவட்ட வன பயிற்றுநர், உணவுப்பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அலுவலர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்