- Advertisement -

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

- Advertisement -

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான, தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் 17 வயதினருக்கான தடகள விளையாட்டு பிரிவில் திருச்சி பொன்மலை கேந்திர வித்யாலயா பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவி பவதாரனி 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டத்தில் முதல் இடமும், 4×100 மீட்டர் ரிலே ஓட்டத்தில்முதல் இடமும் பிடித்து மூன்று தங்கப்பதக்கங்களை வென்றார். 14 வயதினருக்கான தடகள விளையாட்டு பிரிவில் திருச்சி பொன்மலை கேந்திர வித்யாலயா பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவி கிர்த்திகா 200 மீட்டர், 400 மீட்டர், 600 மீட்டர் ஓட்டத்தில் முதல் இடம் பிடித்து மூன்று தங்கமும், 4 ×100 ரிலே ஓட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கமும் வென்றார்.

Vagai

Bismi

வெற்றி பெற்று இன்று திருச்சி திரும்பிய வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் பயிற்ச்சியாளர், விளையாட்டு வீரர்கள் பெற்றோர்கள், பல்வேறு சமூக நல அமைப்புகள் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர். கோவிந்தராஜ், ரயில்வேதுறை அலுவலக கண்கானிப்பாளரும் தேசிய தடகள விளையாட்டு வீரருமான தமிழரசன், தடகள பயிற்ச்சியாளரும் அஞ்சல் துறை ஊழியருமான முனியாண்டி, தமிழ்நாடு நுகர்வோர் பெடரேஷன் தலைவர் சிவசங்கர் சேகரன், ஒயிட் ரோஸ் பொதுநல சேவை அமைப்பின் தலைவர் சங்கர், மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் & தின சேவை அறக்கட்டளையின் நிர்வாகி சிவபிரகாசம் கண்ணன், அமிர்தம் அறக்கட்டளை தலைவர் யோகா விஜயகுமார், பெட்காட் அமைப்பின் செயலாளர் கார்த்தி டேனியல், சாக்ஸிடு அமைப்பின் ஆலோசகர் சசி, மண்ணுக்கும் மக்களுக்கும் அமைப்பின் திருச்சி கிளை ஒருங்கிணைப்பாளர் கேசவன், மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் விளையாட்டு பிரிவு இணை செயலாளர் வழக்கறிஞர் ஆறுமுகம், மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா, மாற்றம் அமைப்பின் நிறுவன தலைவரும் தேசிய மாநில அளவில் விருதுகள் பெற்ற குறும்படத்தின் நடிகரும் இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ் மற்றும் திரளான விளையாட்டு வீரர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்