ஹிந்திப் படங்களில் நடித்து தன் நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை – தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு
மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘சர்க்காரு வாரிபட்டா’ திரைப்படம் நாளை மே-12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில்,
நடிகர் மகேஷ் பாபு தயாரிப்பில் உருவான ‘மேஜர்’ திரைப்படத்தில் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஹிந்திப் படங்களில் ஏன் நடிப்பதில்லை என மகேஷ் பாபுவிடம் கேள்வி எழுப்பினார்,

மகேஷ் பாபு கூறுகையில் ஹிந்தியில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தெலுங்கில் இருக்கும் நட்சத்திர அந்தஸ்து எனக்கு போதுமானது. நான் தெலுங்கு படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன். இந்தியா முழுவதும் உள்ளவர்கள அந்தப் படங்களைப் பார்க்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்’ எனத் தெரிவித்தார்.