திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் திருச்சி கே. கே.நகர்
பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் டீ கடையில் அதிகாரிகள்
சோதனை நடத்தினர்.
சோதனையின்போது டீக்கடையில் 6 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த கடையின்
உரிமையாளரின் சகோதரர்கள் கருமண்டபம் மற்றும்
பொன்னகரில் வைத்திருந்த டீக்கடைகளில் சோதனையில் ஈடுபட்ட பொழுது அங்கும் 160 மற்றும் 240
கிலோ கலப்பட தேயிலை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கே.கே. நகர் பகுதியில் மற்றொரு
டீக்கடையில் 75 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்
செய்துள்ளனர்.
திருச்சியில் மொத்தம் 481 கிலோ கலப்படதேயிலை தூளை பறிமுதல் செய்த அதிகாரிகள்
உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பி
வைத்துள்ளனர்.