- Advertisement -

வெற்றி என்பது சுயத்தால் வரையறுக்கப்படுகிறது, மற்றவர்களால் அல்ல – திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 15 வது ஆண்டு விழாவில் மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் சுஜித்குமார் சிறப்புரை!

0

- Advertisement -

திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கேர் பொறியியல் கல்லூரியின் 15 வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கேர் கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார். மேலும் இவ்விழாவில் மாற்றம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் சுஜித் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

Vagai

அப்போது அவர் பேசுகையில்…

Bismi

கற்றல் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை மற்றும் நாம் கற்றுக்கொண்டது நுண்ணியமானது. வெற்றி என்பது ஒரு ஓட்டப்பந்தயம் அல்ல. ஒரு மாரத்தான். வெற்றி என்பது சுயத்தால் வரையறுக்கப்படுகிறது. மற்றவர்களால் அல்ல. உங்கள் வெற்றியைத் தீர்மானிக்க சகாக்களை அனுமதிக்காதீர்கள். செயலுக்கு முன் தயாரிப்பு முக்கியம். நீங்கள் ஆர்வமுள்ள மாணவர்களாக இருப்பதால், இது உங்கள் தயாரிப்பு நேரம். புதிய கண்டுபிடிப்புகள் தோன்றுவதற்கு 1000 ஆண்டுகள் ஆனது. ஆனால் இன்றைய உலகில், ஒவ்வொரு நாளும் புதிய கண்டுபிடிப்புகள் நடக்கின்றன. பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள், நேர்மறையான அணுகுமுறையை உருவாக்குங்கள் மற்றும் தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

தொடர்ந்து கல்வி மற்றும் விளையாட்டில் சாதனைகள் புரிந்தவர்கள், வெளியேறும் மிகச் சிறந்த மாணவன், சிறந்த ஆசிரியர் மற்றும் சிறந்த துறைக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் இவ்விழாவில் கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்