திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை விருந்தினர் மாளிகை புதிதாக கட்டப்பட்டது இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி நீதித்துறை விருந்தினர் மாளிகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மேயர் அன்பழகன் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதித்துறை உயர் அலுவலர்களும் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.